search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்மரக்கட்டை பறிமுதல்"

    மீஞ்சூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.20 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர். #RedSandalwood
    பொன்னேரி:

    3 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனைகளில், கண்டெய்னரில் கடத்தப்பட்ட 1½ டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த செம்மரக்கட்டைகள் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் குடோனில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதில் 1½ டன் செம்மரக் கட்டைகள் மாயமாகின.

    இந்த திருட்டு குறித்து மாதவரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாதவரம் குடோனில் திருடப்பட்ட செம்மரக்கட்டைகள் மீஞ்சூர் பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு கொண்டு போகப்பட்டது தெரிய வந்தது.

    இதை திருடியது தொடர்பாக பூபதி, ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி திருடப்பட்ட 1½ டன் செம்மரக்கட்டைகள் மீஞ்சூர் அருகே உள்ள கவுண்டர்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் குடோனில் வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து மாதவரம், மீஞ்சூர் போலீசார் அந்த குடோனுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு ஏராளமான செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அங்கு 30 டன் செம்மரக்கட்டைகள் இருப்பதும், அவற்றை வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லாமல் அனுப்புவதும் தெரியவந்தது. இங்கு இருந்த செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.20 கோடி என்று தெரியவந்தது.

    அவற்றை வனத்துறை அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடோன் உரிமையாளர் யார்? வெளிநாட்டு கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #RedSandalwood


    சென்னையில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு செம்மர கட்டைகளை அனுப்ப முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சரக்கு விமானங்கள் மூலம் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பப்படுகின்றன.

    நேற்று சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு அனுப்புவதற்காக சில பார்சல்கள் விமானநிலைய சரக்கு பெட்டகத்துக்கு கொண்டுவரப்பட்டன. அதில் கைவினைப் பொருட்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    பார்சலில் இருப்பது கைவினைப் பொருட்கள் தானா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சிறப்பு நுண்ணறிவு பிரிவு புலன் விசாரணை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அந்த பார்சல்கள் பிரித்து பார்க்கப்பட்டன.

    அப்போது, அதில் கைவினைப் பொருட்களுக்கு பதிலாக செம்மரகட்டைகள் சிறு சிறு துண்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த பார்சல்களில் மொத்தம் 413 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தன.

    இவற்றின் மதிப்பு ரூ.28 லட்சம். இந்த பார்சல்களை அனுப்ப ஏற்பாடு செய்தது யார் என்பது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது பார்சலில் குறிப்பிடப்பட்டு இருந்த சென்னை முகவரி போலி முகவரி என்று தெரியவந்தது. பார்சலில் போய் சேர வேண்டிய ஹாங்காங் முகவரியும் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு செம்மர கட்டைகளை அனுப்ப முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. #ChennaiAirport
    கும்மிடிப்பூண்டி அருகே அரசு பஸ் மற்றும் கார்களில் கஞ்சா, செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கணவன், மனைவி உள்பட 5 பேரை கைது செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் நவீன ஒருங் கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இங்கு இன்று அதிகாலை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ஜூலியர் சீசர் தலைமையில் இன்ஸ் பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர அரசு பஸ்சில் சோதனை நடத்தினர். இதில் பஸ்சில் பயணம் செய்த கம்பத்தை அடுத்த உத்தமபாளையத்தை சேர்ந்த ஐயன், அவரது மனைவி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.

    அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் அதே சோதனைச் சாவடியில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்ட போது ஆந்திராவில் இருந்து வந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் அதில் இருந்த 2 வாலிபர்களும் ஓடும் காரில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட முயன் றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். டிரைவர் இல்லாமல் ஓடிய காரை பொன்னேரி கலால் போலீஸ் காரர் சந்திரசேகரன் நிறுத் தினார். அப்போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    பிடிபட்ட 2 பேரும் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த சுரேஷ்பாபு, பாலச் சந்திரா என்பதும் ஆந்திரா வில் இருந்து சென்னைக்கு காரில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கார், 300 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு செம்மரக் கட்டை கிடைத்தது எப்படி? யாருக்கு கடத்தி செல்லப்படு கிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    அதிகாரிகளின் அதிரடி சோதனையில் கஞ்சா, செம்மரக்கட்டைகள் அடுத் தடுத்து சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×